×

காதலியின் ஆபாச படங்களை வெளியிட்ட இன்ஜினியர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கென்டையனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இன்பசேகரன்(55). இவருக்கு திருமணமாகவில்லை. பி.இ. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வந்த 27 வயது இளம்பெண்ணுடன் இன்பசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தபோது இன்பசேகரன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இன்பசேகரன், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து அந்த பெண், அளித்த புகாரின் பேரில் போலீசார் இன்பசேகரனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில் இன்பசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

The post காதலியின் ஆபாச படங்களை வெளியிட்ட இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Inbhasekaran ,Kendayanaalli ,Palakodu, Dharmapuri district ,B.E. ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி