×

2 ஆண்டுகளில் ரூ.5,956 கோடி போதை பொருள் பறிமுதல்

காந்திநகர்: கடந்த 2021ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்மந்த மாக துறைமுக சரக்கு கையாளும் பிரிவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்று காங்கிரஸ் எம்எல்ஏ கெனிபென் தாக்குர் பேரவையில் நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, ‘‘அதானி நிறுவனம் நடத்தும் முந்த்ரா துறைமுகத்தை பற்றி பேசி காங்கிரஸ் அரசியல் செய்கிறது. 2 ஆண்டுகளில்,ரூ.5,956 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

The post 2 ஆண்டுகளில் ரூ.5,956 கோடி போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gandhinagar ,Mundra port ,Gujarat ,Congress ,MLA ,Keniben Thakur ,Dinakaran ,
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...