புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் வழங்கப்பட்ட அரசுக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும் என குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கோத்ரா வன்முறையின் போது பாலியியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணான பில்கிஸ் பானு தொடர்ந்த ரிட் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகிய அமர்வு,\” பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 குற்றவாளிகளின் முன் விடுதலையை ரத்து செய்ததோடு, இதில் தலையிட குஜராத் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கடந்த மாதம் 8ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் குஜராத் மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுள்ளது. அதில்,\\”பில்கிஸ் பானு விவகாரத்தில் நன்னடைத்தையை அடிப்படையாக கொண்டு தான் குற்றவாளிகள் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது குஜராத் மாநில அரசுக்கு எதிராக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
The post பில்கிஸ் பானு வழக்கில் எதிரான கருத்தை நீக்க குஜராத் அரசு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.