×

மகளிர் கல்லூரியில் வீடியோ எடுத்ததாக புகார் அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி முதல்வர் சீனிவாசன் கடந்த 10ம் தேதி வாலாஜா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், ‘’கடந்த 8ம் தேதி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தூண்டுதலின்பேரில், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா, மகளிரணி நிர்வாகி சாந்தி உள்ளிட்ட 20 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்து, தூய்மை செய்வதுபோல் நடித்து அங்கு செல்போனில வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

The post மகளிர் கல்லூரியில் வீடியோ எடுத்ததாக புகார் அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Makalirani ,Walaja ,Walaja Government Women's College ,Ranipet district ,Srinivasan ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...