×

மதுவுடன் சேர்த்து போதை காளான் தின்ற மாணவி பலி கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்திய வழக்கில் காதலன் கைது

ஊட்டி : ஊட்டியில் மதுவுடன் சேர்த்து போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி இறந்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). 2ம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர். இவரது காதலி ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர். 20 வயது நிரம்பிய அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 10ம் தேதி ஆகாஷ் வீட்டில் யாரும் இல்லாததால் காதலியை அழைத்து வந்துள்ளார். ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். இருவரும் மது அருந்தினர். போதிய போதை இல்லாததால் ஆன்லைனில் போதை காளானை தேடியுள்ளனர்.

அப்போது மோஜிக் என்ற காளான் அதிக போதையுடன் பாலுணர்வை தூண்டும் என்பதை அறிந்தனர். அதன்படி அருகில் உள்ள பைன் பாராஸ்ட் பகுதிக்கு சென்று போதை காளானை கண்டுபிடித்து வீட்டுக்கு பறித்து வந்தனர். அதனை சமைத்து மதுவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்னர் தூக்கத்திலோ அல்லது மயக்கத்திலேயே உயிர் போயிருப்பது தெரியவந்துள்ளது. முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து ஆகாஷை கைது செய்தனர்.

The post மதுவுடன் சேர்த்து போதை காளான் தின்ற மாணவி பலி கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்திய வழக்கில் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Akash ,Bombay Castle ,Nilgiris district ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...