×

மூணாறில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

*சுற்றுலா பயணிகள் ஓட்டம்

மூணாறு : கேரளா மாநிலம் மூணாறில் நேற்று முன் தினம் இரவு ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை காரை அடித்து உடைத்து, சுற்றுலா பயணிகளை விரட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பிரபல சுற்றுலா தலமான மூணாறில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகே நேற்று முன் தினம் இரவு ஒற்றை ஆண் யானை சாலையில் இறங்கியது. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள் சாலை அருகே உள்ள டீ கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். திடீரென சாலையில் இறங்கிய யானையை கண்ட அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது வங்கி அருகே நின்றிருந்த காரை யானை அடித்து உடைத்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மாங்குளம் பகுதியில் சுற்றித்திரியும் இரண்டு காட்டு யானைகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய மூணாறு மற்றும் லட்சுமி எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிகிறது. அந்த யானை தான் மூணாறு நகருக்குள் புகுந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post மூணாறில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை appeared first on Dinakaran.

Tags : Munnar ,Munnar, Kerala ,
× RELATED மூணாறில் காரை அடித்து உடைத்த காட்டு யானை கூட்டம்