×

சவுதி அரேபியாவில் இறந்த மீனவர் உடலை கொண்டுவர வேண்டும்

*உறவினர்கள் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில் : கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் டன்ஸ்டன் தலைமையில் மீனவர்களின் உறவினர்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பள்ளம் ஊரை சேர்ந்தவர் ஜாண் கென்னடி மகன் சகாய சுபின்(26). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சவுதி அரேபியா நாட்டின் தரின் என்னும் இடத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 12ம் தேதி கடலில் தொழில் செய்துகொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். இறந்த அவரது உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post சவுதி அரேபியாவில் இறந்த மீனவர் உடலை கொண்டுவர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Collector ,Nagercoil ,Dunstan ,Coastal Peace and Development Center ,Kumari District ,Dinakaran ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!