×

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், இரும்பைப் பொன்செய்யும்

இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து! என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Tamil Nadu ,Sripathi ,Chennai ,Tamilnadu ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...