×

ரத்ததான முகாம்

பாலக்கோடு, பிப்.14: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்பறம் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பாலக்கோடு அரசுமருத்துவமனை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் இனைந்து நடத்திய, ரத்ததான முகாம் நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மேலாளர் மருத்துவர் பிரியா தலைமை வகித்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி, துணை முதல்வர் ரவி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 200க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முருகன், சந்தோஷ்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Palakodu Government Hospital ,Polytechnic College National Welfare Program ,Government Polytechnic College ,Co-operative Sugar Mill ,Dharmapuri Government Medical College Blood Bank ,Blood Donation ,Camp ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை