×

ஆளுநர் மாளிகை தகவல் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பினார். மேலும் அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பினார். முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு ஆளுநர் மாளிகை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆளுநர் மாளிகை தகவல் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Sendil Balaji ,Chennai ,Minister ,Governor's House ,First Minister ,Mundinam ,Stalin ,Sendyl Balaji ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...