×

கொடநாடு வழக்கு 9வது குற்றவாளி ஆஜராக சம்மன்

ஊட்டி: ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியா கருதப்படும் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் குற்றவாளியான சயானிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் 35 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மனோஜ்சாமி, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

The post கொடநாடு வழக்கு 9வது குற்றவாளி ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Sayan ,Koda Nadu ,Jayalalithaa ,Sasikala ,Kanagaraj ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...