×

சர்வீசுக்கு வந்த காரில் 11 அடி நீள மலைப்பாம்பு

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் தனது காரை பழுது நீக்குவதற்காக தெற்கு வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் கார் விற்பனை ஷோரூமில் நேற்று முன்தினம் விட்டுச் சென்றார். இதையடுத்து ஊழியர்கள் அந்த காரை சர்வீஸ் செய்வதற்காக காரின் இன்ஜின் பேனட் பகுதியை திறந்துள்ளனர். அப்போது இன்ஜின் மேல் பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post சர்வீசுக்கு வந்த காரில் 11 அடி நீள மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Parameswarapuram ,Radhapuram ,Nellai district ,South Valliyur ,Dinakaran ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது