×

திண்டுக்கல்லில் வியாபாரிகளுக்கு காய்கனி விற்பனை தள்ளுவண்டி தயார்

திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல்லில் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக காய்கனி விற்பனை தள்ளுவண்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நலிவுற்ற வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கனி விற்பனை தள்ளுவண்டி மானியத்துடன் வழங்கி வருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தில் 40 தள்ளுவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, அந்தந்த வட்டார அளவில் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனி வண்டிகள் தேவைப்படுபவர்கள், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திண்டுக்கல்லில் வியாபாரிகளுக்கு காய்கனி விற்பனை தள்ளுவண்டி தயார் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Horticulture ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...