- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- வாசுதேவநல்லூர் தொகுதி
- சாதன் திருமலிகுமார்
- மதிமுக
- யூனியன்
- ரயில்வே அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் வாசுதேவநல்லூர் தொகுதி உறுப்பினர் சதன் திருமலைக்குமார்(மதிமுக) பேசியதாவது: ஒன்றிய ரயில்வே அமைச்சர் ரயில்வே துறையில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் 10ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் தெற்கு ரயில்வேயில் 6 டிவிஷன்கள் உள்ளன. அதற்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு திருவனந்தபுரத்தில் ஒரு தேர்வு வாரியமும், சென்னையில் ஒரு தேர்வு வாரியமும் உள்ளது. மதுரை கோட்டத்தில் 750 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு திருவனந்தபுரம் கோட்டத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அந்த தேர்வை சென்னையில் நடத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
The post 750 பணியிடங்கள் நிரப்புவதற்கான ரயில்வே தேர்வை சென்னையில் நடத்த நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.