×

பணியில் இருந்தபோது திடீர் வலிப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசுபஸ் டிரைவர்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பணியில் இருந்தபோது திடீர் வலிப்பு ஏற்பட்டபோதும் பயணிகளை காப்பாற்றிவிட்டு அரசுபஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து பென்னானூர்பேட்டை நோக்கி அரசுப் பேருந்தை நேற்று அவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

வெள்ளாத்துக்கோட்டை நோக்கிச் சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்தை அவர் சாலையோரம் நிறுத்தியுள்ளார். பின்னர் வலிப்பு அதிகமாகவே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பென்னலூர்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்டுநர் ஹேமநாதன் ஏற்கனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும்படியும் ஓட்டுநர் பணியை தவிர்க்கும்படியும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பணியில் இருந்தபோது திடீர் வலிப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசுபஸ் டிரைவர்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Hemanathan ,Pujjirettipalli village ,Tiruthani ,Tiruvallur Government Transport Corporation ,Leschi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...