×

பக்ரைன் விமானத்தில் சென்னை வந்த பெண் மாரடைப்பால் பலி

சென்னை: பக்ரைனில் இருந்து கல்ஃப் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 167 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது பள்ளப்பட்டியை சேர்ந்த, அப்ரின் பர்வீன் (41) என்ற பெண்ணுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானம் 17 நிமிடங்கள் முன்னதாக, அதிகாலை 3.03 மணிக்கு தரை இறங்கியது. உடனடியாக மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்து, அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, அதிகாலை 5.40 மணிக்கு, 158 பயணிகளுடன் சென்னையில் இருந்து பக்ரைன் புறப்பட்டு சென்றது.

The post பக்ரைன் விமானத்தில் சென்னை வந்த பெண் மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bahrain ,Gulf Airlines ,Abrin Parveen ,Pallapatti ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...