×

தாம்பரம்- செங்ேகாட்டை வாரம் மும்முறை ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

நெல்லை: தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலுக்கு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் வழங்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தாம்பரம்- செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரஸ்(எண்கள்: 20683-20684) நெல்லை வழியாக வாரம் மும்முறை இயக்கப்பட்டு வருகிறது. தென்காசி, நெல்லை மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் இந்த ரயிலில் கூட்டம் எப்போதுமே அலைமோதும். இதில் செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரஸ், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்ேகாட்டையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் செவ்வாய், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என நெல்லை கிழக்கு மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் அக்கோரிக்கை ஏற்கப்பட்டு அந்த ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நிற்கும் தேதி மற்றும் கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தாம்பரம்- செங்ேகாட்டை ரயில் இனிவரும் காலங்களில் விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறை பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The post தாம்பரம்- செங்ேகாட்டை வாரம் மும்முறை ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Kallidaikurichi ,Railway Board ,Nellai ,Nellai district ,Thambaram ,Thambaram-Sengottai ,Thambaram Express ,Tenkasi, ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...