×

விஜயகாந்த், பாத்திமா பீவிக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழக சட்டபேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக பேரவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.வடிவேல், தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமாசாமி, கு.க.செல்வம், ராசசேகரன் ஆகியோர்க்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, மறைந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன், கண் மருத்துவர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post விஜயகாந்த், பாத்திமா பீவிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Fatima Bivi ,Chennai ,Assembly ,DMD ,Tamil ,Nadu ,Governor ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது