×

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

தூத்துக்குடி, பிப். 13: தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான தனிப்படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலையானந்த சுவாமி கோயில் தெரு சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், இதே பகுதியைச் சேர்ந்த அலமேலுநாதன் (59) என்பதும், விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. தனிப்படை போலீசார், அலமேலு நாதனை கைது செய்து 400 கிராம் கஞ்சா, ₹48,580 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin North ,Inspector ,Prem Anand, ,SI Ravikumar ,Walayananda Swamy Koil Street ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...