×

அகமதாபாத் புறப்பட்டு சென்றனர் திருச்சி மாவட்டத்தில் கிடேரி கன்றுகளுக்கு 3வது சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசி கால்நடைவளர்ப்போர் பயன்பெற வேண்டுகோள்

திருச்சி, பிப்.13: திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கிடேரி கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசி போட அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தேசிய வெக்கை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சுற்றுகள் புருஸ்ஸிலா தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் பிப்.15 முதல் மார்ச்.15 முடிய 30 நாட்களுக்கு 3வது சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப் பணியின்போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காதுவில்லைகள் பொருத்தப்பட்டு, இத்தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். கிடேரி கன்று வைத்துள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசிப் போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகிடுமாறும், கன்றுகளுக்கு தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post அகமதாபாத் புறப்பட்டு சென்றனர் திருச்சி மாவட்டத்தில் கிடேரி கன்றுகளுக்கு 3வது சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசி கால்நடைவளர்ப்போர் பயன்பெற வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Ahmedabad ,Trichy ,District Collector ,Pradeep Kumar ,Tiruchirappalli ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...