×

மருமகளின் திருமணத்தில் பங்கேற்க சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சிசோடியா, அவரது மருமகளின் திருமணத்தில் பங்கேற்க 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் 2023 பிப்.26ம் தேதி சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர் மருமகள் திருமணத்தில் பங்கேற்க ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக்பால் வரும் 15ம் தேதி வரை சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.

The post மருமகளின் திருமணத்தில் பங்கேற்க சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Sisodia ,New Delhi ,Aam Aadmi Party ,Delhi ,
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...