×

ஹோட்டல் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

விராலிமலை,பிப்.13: இலுப்பூரில் ஹோட்டல் தொழிலாளி விஷமருந்தி உயிரிழந்தார்.இலுப்பூர், மேலப்பட்டி புது நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(49) திருமணமான இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ளனர். உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் கடந்த பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த 8 ம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை தின்று மயங்கினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சகுந்தலா(45) இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

The post ஹோட்டல் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Illupur ,Satish Kumar ,Melapatti Pudu, Illupur ,Dinakaran ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா