×

காரில் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு

பெரம்பலூர்,பிப்.13: செட்டிக்குளம் கிராமத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் 25 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக பெரம்பலூர், எம்ஜிஆர் நகர் ஆலம்பாடி ரோடு பகுதியை கமல் (30), மற்றும் பெரம்பலூர், சங்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகத்திற்கு, பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்றுகுற்றவாளிகளான கமல், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்தியசிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post காரில் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,PERAMBALUR ,SETIKULAM ,Settikulam ,Panthalur police ,Perambalur district ,Alathur taluka ,Dinakaran ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா