×

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நாமக்கல், பிப்.13: நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாககத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுகந்தினி (40), நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தனது மகனுடன் வந்தார். அப்போது, சுகந்தினி திடீரென மண்ணெண்ணெயை உடலில்
ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், தீக்குளிப்தை தடுத்து அவரை மீட்டனர். இதுபற்றி அறிந்த கலெக்டர் உமா, சுகந்தினியை அழைத்து பேசினார்.

அப்போது அவர், ‘மல்லசமுத்திரத்தில் சாலையில் கழிவுநீர் டேங்க், வேகத்தடை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்ததால், எனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தீக்குளிக்க முயன்றேன்’ என்றார். இதையடுத்து, கலெக்டர், காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

The post கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Matheswaran ,Mallasamudra ,Thiruchengode ,Sukandini ,Dinakaran ,
× RELATED 78.16 சதவீதம் வாக்குபதிவு