×

4 நக்சல்களுக்கு ஆயுள் தண்டனை

ஜக்தல்பூர்: சட்டீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் தகக்வாடா கிராமத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் மீது கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நக்சல்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள், மாநில போலீசார் 4 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு குறித்து தெங்க்பால் போலீசார் முதல் குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறப்பு நீதிபதி தேவன்கான், குற்றவாளிகளான மகாதேவ் நாக், காவாசி ஜோகா, மணி ராம் மதியா, தயாராம் பாகல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

The post 4 நக்சல்களுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Naxals ,Jagdalpur ,CRPF ,Tagakwada ,Sukma district ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை