முன்னாள் பிரதமர் சரண்சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால் இந்தியா கூட்டணியில் இருந்த அவரது பேரன் ஜெயந்த்சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ கூட்டணிக்கு தாவியது. அதுவும் இந்தியா கூட்டணியில் உத்தரபிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகள் பெற்று, தொகுதி பங்கீட்டில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கையெழுத்த போட்ட பிறகு ஜெயந்த் சிங் அடித்த பல்டி பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபற்றி கேட்டதற்கு ஜெயந்த்சிங் கூறியதாவது; தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடையவில்லை. பா.ஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் பேசி முடிவெடுத்தேன். உரிய திட்டமிடல் இல்லை. சூழ்நிலை காரணமாக குறுகிய காலத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பா.ஜ கூட்டணி தொண்டர்கள் எடுத்த முடிவு: சிரிப்பு காட்டும் ஜெயந்த் சிங் appeared first on Dinakaran.