×

3 அரசு பஸ்கள் ஜப்தி

திருச்சி: திருச்சி அரிமங்கலம் காமராஜ்நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல்அமீது (39), சபீரான் (35). இருவரும் கடந்த 5.8.2018 அன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதியதி இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை மாவட்ட நீதிமன்றம், பலியான சாகுல்அமீதுக்கு ரூ.34 லட்சத்து 2 ஆயிரத்து 300ம், சபீரானுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

The post 3 அரசு பஸ்கள் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Sakul Ameedu ,Sabhiran ,Velayudham Street, Arimangalam, Kamarajnagar, Tiruchi ,Trichy-Chennai National Highway ,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்:...