×

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தநிலையில் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார். புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பியதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

The post அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sendil Balaji ,Chennai ,Sentilpalaji ,Jailed ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...