×

சைதை துரைசாமியின் மகன் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல்

ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: சைதை துரைசாமியின் மகன் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி

அன்புச் சகோதரர் சைதை துரைசாமி தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகளை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி அவர்களுடைய துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
பெற்ற மகளை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்

 

 

 

 

 

 

 

The post சைதை துரைசாமியின் மகன் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Saitai Duraisami ,Paneer Selvam ,Chennai ,Saithai Duraisamy ,Atonad ,Himachal Pradesh ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...