×

கஞ்சா தருவதாக சுடுகாடுக்கு வரவழைத்து வாலிபரை சரமாரியாக வெட்டி செல்போன், பணம் கொள்ளை: 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

பெரம்பூர்: கஞ்சா பொட்டலம் தருவதாக வாலிபரை வரவழைத்து சரமாரியாக வெட்டி செல்போன், பணம் பறித்த 3 பேரை கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (25). சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில், வியாசர்பாடியை சேர்ந்த அஜய் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கஞ்சா கேட்டுள்ளார்.

அதற்கு அஜய், ‘’வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே வந்தால் கஞ்சா பொட்டலங்கள் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து வெற்றிவேல் சென்றபோது அங்கிருந்த அஜய் உள்பட 4 பேர் சேர்ந்து வெற்றிவேலை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்ததுடன் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

இதில் வெற்றிவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஏற்கனவே வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில், வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (எ) மிக்கி மவுஸ் (23), ராஜி (எ) ஜோஸ்வா (20), ஆகாஷ் (எ) ஆறுச்சாமி (20) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்ழக்கில் தொடர்புடைய அஜய்யை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா தருவதாக சுடுகாடுக்கு வரவழைத்து வாலிபரை சரமாரியாக வெட்டி செல்போன், பணம் கொள்ளை: 3 பேர் கைது; ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vetrivel ,Vyasarpadi Nehru Nagar ,Chennai ,Chennai Corporation ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு