×

நொளம்பூரில் வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது; பரபரப்பு தகவல்கள்

அண்ணாநகர்: நொளம்பூரில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். இதுசம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னைஅமைந்தகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தில் ஒருவர் ஹவாலா பணத்தை எடுத்துச் செல்கிறார் என்று அமைந்தகரை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் அமைந்தகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது போனில் பேசிய நபர் கூறியது எந்தவகை வாகனம் என்பது தெரியாமல் போலீசார் தவித்து வந்தனர்.

அந்த சமயத்தில் அந்த நபர் மீண்டும் போலீசாருடன் தொடர்புகொண்டு, ‘‘அடையாளம் தெரியாத வாகனம் உங்களை தாண்டி செல்கிறது. தற்போது அந்த வாகனம் நொளம்பூர் பகுதியில் நிற்கிறது’’என்று விலாசத்துடன் தகவலை சொல்லி விட்டு மீண்டும் இணைப்பை துண்டித்துவிட்டார். இதன்அடிப்படையில், போலீசார் சென்று அந்த வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பிச் செல்ல முயன்றபோது அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘’அப்துல் ஹமீது(26) என்பதும் ஹவாலா பணம் பரிமாற்றும் செய்வதற்காக பணம் மற்றும் நகைகளை நொளம்பூர் பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்தி ஒரு கோடியே 18 லட்ச ரூபாய் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுசம்பந்தமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அப்துல்ஹமீதுவை கைது செய்து ஹவாலா பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post நொளம்பூரில் வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது; பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Nolampur ,Annanagar ,Chennai Amindakarai ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்