×

விருதுநகரில் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

மதுரை: பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழந்தனர் என உயர் நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 1087 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 2963 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

The post விருதுநகரில் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : firecracker ,Virudhunagar Madurai ,Virudhunagar district S.P. ,Virudhunagar district ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு