×

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 

The post நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,VISIKA ,Chennai ,Anna Entwalaya ,2024 Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...