×

நாகர்கோவிலில் சர்வதேச சதுரங்கப்போட்டி உக்ரைன் வீரருக்கு முதல் பரிசு

 

நாகர்கோவில், பிப். 12: குமரி மாவட்ட சதுரங்கக் கழகம், தமிழ்நாடு சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய 16வது சர்வதேச ஐஎம் நார்ம் சதுரங்க போட்டி நாகர்கோவிலில் 5 நாட்கள் நடந்தது. போட்டியில் பிரான்ஸ், ரஷ்யா, உக்ரைன், ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த 5 சதுரங்க வீரர்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த 5 வீரர்கள் கலந்து கொண்டனர். 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் தொடங்கி வைத்தார்.

போட்டியில் முதல் பரிசை உக்ரைன் நாட்டை சேர்ந்த சிட்னிகோ ஆண்டன் பெற்றார். இரண்டாம் பரிசை இந்தியாவை சேர்ந்த லோகேஷ், 3ம் பரிசை இந்தியாவை சேர்ந்த சுயோக்வாக் பெற்றனர். பரிசுகளை தமிழ்நாடு சதுரங்கக் கழகத்தின் இணைச்செயலாளர் பிரகதீஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சதுரங்கக் கழக துணைத்தலைவர் விஜயராகவன், கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் ரெக்ஸ், மாவட்ட செயலாளர் வின்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் சர்வதேச சதுரங்கப்போட்டி உக்ரைன் வீரருக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : International ,tournament ,Nagercoil ,16th International IM Norm Chess Tournament ,Kumari District Chess Association ,Tamil Nadu Chess Association ,France ,Russia ,Ukraine ,Zimbabweans ,International chess ,Dinakaran ,
× RELATED சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன்...