×

புதுக்கோட்டையில் நாளை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

 

புதுக்கோட்டை, பிப்.11: புதுக்கோட்டையில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக நாளை (12ம் தேதி)காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ,மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.7,000 முதல் ரூ.13,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டையில் நாளை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Government Private Vocational Training Centre ,Pudukkottai District ,All India Industry ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...