×

தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர் சின்டெக்ஸ் டேங்க் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

 

கரூர், பிப். 12: தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகரில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டு பகுதிகளிலும் மக்களின் உபரி தண்ணீர் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் பயன்பாடு காரணமாக அந்தந்த பகுதியினர் தங்களின் உபரி பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதே போல், கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து தரப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
தற்போதைய நிலையில், அவை பயன்பாடாமல் உள்ளது. இதனால், பொமக்கள் கூடுதல் தண்ணீர் தேவைக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, சின்டெக்ஸ் டேங்கை விரைந்து பழுது நீக்கவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.

The post தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகர் சின்டெக்ஸ் டேங்க் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Danthonymalai ,Nagar ,Karur ,Venkateshwara, Danthonymalai ,Karur Municipality ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்