×

கரூர் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

 

கரூர், பிப். 12: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஒபி வங்கியின் 88வது ஆண்டு விழாவினை முன்னிட்டு ஐஒபி மற்றும் கரூர் மாநகராட்சி இணைந்து மருத்துவ முகாம் நடத்தியது. மாநகராட்சி கமிஷனர் சுதா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கவிதா முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில், சர்க்கரை, ரத்த கொதிப்பு, கண் பரிசோதனை, முழு உடல் சிகிச்சை பரிசோதனைகள் நடந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் வசந்தகுமார், மாநகர் நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரூர் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Karur Corporation ,Karur ,IOB ,IOB Bank ,Karur Corporation Office ,Sudha ,Dinakaran ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...