×

கரூர் வெங்கமேடு அருகே மகள் காதல் திருமணம் தாய் தற்கொலை

 

கரூர், பிப். 12: கரூர் வெங்கமேடு அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்ட விரக்தியில் தாய் தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அன்னை சத்தியா தெருவை சேர்ந்தவர் புஷ்பா (40). இவரின் மகள் கடந்த 1 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், புஷ்பா மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10ம்தேதி மதியம், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கரூர் வெங்கமேடு அருகே மகள் காதல் திருமணம் தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur Vengamedu ,Karur ,Pushpa ,Vengamedu ,Annai Satya Street ,Karur Corporation ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...