×

திமுக கோட்டையாக திருப்பூர் மாறும்

 

திருப்பூர், பிப். 12: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி ைமதானத்தில் நேற்று அரசு விழா நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக திருப்பூர் விளங்கி வருகிறது. 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பயன் பெறுவார்கள்.

நாள் ஒன்றுக்கு மாநகராட்சியில் 850 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு குரல் புரட்சி மூலமாக 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் 750 கிலோ மீட்டருக்கு தார்சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளது. ரூ.50 கோடிக்கு 14 வடிகால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 ஆயிரம் தெருவிளக்குகள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் கடந்த ஆண்டு 8,887 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதுபோல் மாநகராட்சி பள்ளிகளுக்கு கழிவறைகள், கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 136 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியுள்ளோம். தனியார் பங்களிப்போடு 42 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களுடன் மேயர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக கோட்டையாக திருப்பூர் மாவட்டம் மாறும். இவ்வாறு மேயர் பேசினார்.

The post திமுக கோட்டையாக திருப்பூர் மாறும் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,DMK ,Tirupur Chikkanna College ,Youth Welfare ,Sports Development Minister ,Udhayanidhi Stalin ,Dinesh Kumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...