×

மோடி ஆட்சியில் வளர்ச்சியில்லை மதவெறிதான்: ஜவாஹிருல்லா கொதிப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வெல்லட்டும் இந்தியா தலைப்பில் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட அந்த கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பேசியதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசாவும், பள்ளிவாசலும் சட்ட விரோதமாக இடித்துவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிற மோடி அரசு, வளர்ச்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் மோடியின் நண்பர் அதானியின் வளர்ச்சி மட்டும்தான். வேலை வாய்ப்பு இல்லை. வறுமையை ஒழிக்க முடியவில்லை. மதவெறியை மட்டுமே பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்தியா கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மோடி ஆட்சியில் வளர்ச்சியில்லை மதவெறிதான்: ஜவாஹிருல்லா கொதிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Jawahirullah ,India ,Humanist People's Party ,Binnathur ,Parangippet, Cuddalore district ,MLA ,Uttarakhand ,
× RELATED இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர...