×

கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு ராஜகனி அலங்காரம்

கும்பகோணம், பிப்.11: கும்பகோணம் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு தை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று 10 ஆயிரத்து 8 எலுமிச்சை பழங்களால் ஆன ராஜகனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகர் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு உலக நன்மை வேண்டி 10 ஆயிரத்து 8 எலுமிச்சை பழங்களால் ஆன ராஜகனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை, 1001 முறை இராம நாம ஜெபம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சன்னிதான நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

The post கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு ராஜகனி அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Jayamaruthi Anjaneyar ,Rajagani ,Vishvarupa ,Jayamaruthi Anjaneyaswamy ,Thai ,Balakarai ,Kamaraj Nagar ,Viswarupa ,Jayamaruthi Anjaneya ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...