×

நகராட்சி பள்ளி ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு

பரமக்குடி,பிப்.11: பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள தியாகி சீனிவாசன் நினைவு நகராட்சி தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரேமலதா ஆண்டு அறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். 23வது வார்டு கவுன்சிலர் டாக்டர் பாக்கியம், வார்டு கவுன்சிலர் தேவிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அரசு சார்பாக நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் டாக்டர் பாக்கியம் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாண்டீஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஆசிரியை அம்பிகாவதி நன்றி கூறினார்.

The post நகராட்சி பள்ளி ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Tyagi Srinivasan Memorial Municipal Primary School ,Headmistress ,Premalatha ,District Education Officer ,Ravikumar ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த...