×

வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் கருகின

 

திருச்செங்கோடு, பிப்.11: திருச்செங்கோடு 31வது வார்டு கரட்டுப்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன்(72). இவர் மனைவி முத்தாயியுடன் வசித்து வந்தார். இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். தொழிலுக்கு பயன்படும் ஒயர்கள் போக்கஸ் லைட்டுகள், மைக்குகள், ஆம்ளிபையர்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் மின் சாதனங்களை தனது மற்றொரு வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை, திடீரென அந்த வீட்டில் தீப்பிடித்து புகை வந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பழனியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமானது.

The post வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் கருகின appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Palaniappan ,Karatupalayam Boyer Street, Ward 31, Tiruchengode ,Muthai ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி