×

எடப்பாடி பழனிசாமி பிஏவின் வீட்டில் கொள்ளை முயற்சி

 

நாமகிரிப்பேட்டை, பிப்.11: நாமகிரிப்பேட்டை அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிஏ வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அருண்பிரகாஷ்(32). நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டத்துடன் கூடிய வீடு உள்ளது. அங்கு அவரது மனைவி அருள்பிரியா(30) மற்றும் பெற்றோர் செல்வகுமார்(60), விஜயலட்சுமி(55) ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2 கார்களில் வந்த 6 மர்ம நபர்கள், வீட்டிற்குள் செல்வதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அருள்பிரியா, வெளியில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டு திடுக்கிட்டார். அவர்கள் கொள்ளையடிக்க வந்திருப்பதை அறிந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு கொள்ளையடிக்க வந்த நபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், ஆயில்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிப்பதற்காக ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி பிஏவின் வீட்டில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami PA ,Namakrippet ,Chief Minister ,Edappadi Palaniswami ,PA ,Arun Prakash ,Tamil ,Nadu ,Edappadi Palaniswami.… ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்