×

ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது

 

சேலம், பிப்.11: சேலம் வழியே சென்ற ரயிலில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவரை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் கோட்ட ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று முன்தினம், ஆர்பிஎப் குற்றப்பிரிவு உதவி எஸ்ஐ பினு தலைமையிலான குழுவினர், திப்ரூக்கர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரசில், சேலத்தில் இருந்து கோவை வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை எடுத்து பரிசோதித்தனர். அதனுள் ₹6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா இருந்தது. உடனே அதனை பறிமுதல் செய்து, கடத்தி வந்த நபர் பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த பெட்டியில் இருந்த கோவை மருதமலை பகுதியை சேர்ந்த கோவிந்தன் (55) என்பவர் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும், போலீசாரின் சோதனையை பார்த்ததும், அதனை போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த கோவிந்தனை ஆர்பிஎப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை ஆர்பிஎப் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கிரீஷ் தலைமையிலான போலீசார் அவர் மீது வழக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் குற்றப்பிரிவு போலீசார் கஞ்சா வேட்டையை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,RPF ,Odisha ,Andhra ,Erode ,Coimbatore ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை