×

பிளஸ்2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் வருகிற ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். எந்த புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

The post பிளஸ்2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...