×

அச்சிறுப்பாக்கம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்


மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே குழந்தையுடன் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நேமம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா வயது (28). இவரது கணவர் வசந்த், மகள் ஷாலினி (2). கடந்த மாதம் 24ம் தேதி ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லை என வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு, குழந்தையுடன் பிரியங்கா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அச்சிறுப்பாக்கம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Achirpakkam ,Madhurandakam ,Achirupakkam ,Priyanka ,Nemam Pudu Colony ,Madhurantagam ,Chengalpattu District ,Vasanth ,Shalini ,Mayam ,
× RELATED அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர்...