- மதுராந்தகம்
- தமிழ்நாடு ரேஷன் கடை சங்கம்
- தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர் சங்கம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- இணைப் பதிவாளர்
- நந்தகுமார்
- தின மலர்
மதுராந்தகம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ரேஷன் கடை சங்கத்தினர் மாவட்ட இணை பதிவாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று செங்கல்பட்டு மாவட்ட இணை பதிவாளர் நந்தகுமாரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதில் விற்பனையாளர்களின் இபிஎப் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும், நியாய விலை கடையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சம்பளப் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், 800 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும்,
குடோன்களில் இருந்து வரும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எடை குறையாமல் நியாய விலை கடைக்கு வழங்கவேண்டும், மகளிர் நியாய விலைக்கடை நடத்தும் மகளிர் விற்பனையாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வின்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சங்கர், மாநில மகளிர் அணி பொருளாளர் சிவகாமி, பொதுக்குழு உறுப்பினர் குணசுந்தரி, மாவட்ட நிர்வாகி ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.