×

குடந்தை ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நன்கொடை செலுத்த கியூ.ஆர். கோடு வசதி: சுற்றுலா பயணி துவக்கி வைத்தார்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்தாண்டு மார்ச் 27ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து சுமார் ரூ.6 கோடி மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு நன்கொடையாளர்கள் ஆன்லைன் மூலம் க்யூ.ஆர் கோடு பயன்படுத்தி நன்கொடை வழங்கும் பணி நேற்று கோயில் வளாகத்தில் தொடங்கியது.

கோயில் வளாகத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள க்யூ.ஆர் கோடு வசதியை சுற்றுலா பயணியான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மார்கோ ஏஞ்சல் முதலாவதாக க்யூ.ஆர் கோடு பயன்படுத்தி நன்கொடை பணம் செலுத்தி பணியை துவக்கி வைத்தார்.

The post குடந்தை ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நன்கொடை செலுத்த கியூ.ஆர். கோடு வசதி: சுற்றுலா பயணி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kudandai Adhikumbeswarar Temple R. Line ,Kumbakonam ,Kumbakonam Adhikumbeswarar Temple ,Tanji District ,Kumbabhishek ,Kumbaphishek ,Kudanthai Adhikumbeswarar Temple R. Line ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி