×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப். 10: சிவகங்கை அரண்மனைவாசல் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பாஜ அரசின் மாநில உரிமைகள் மீதான தாக்குதலை கண்டித்தும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்களின் நடவடிக்கைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்(பொ) கருப்புச்சாமி தலைமை வகித்தார். திமுக சார்பில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கண்டன உரையாற்றினர்.

திமுக மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சஞ்சய்காந்தி, துணைத்தலைவர்கள் சண்முகராஜன், உடையார், மாவட்ட செயலாளர்கள் பசும்பொன் மனோகரன் (மதிமுக), சாத்தையா (இந்திய கம்யூனிஸ்ட்), பாலையா (விசிக), அப்துல் முத்தலிபு(தமுமுக), மலை.பாலா(தவாக), திக மாவட்டத்தலைவர் புகழேந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தண்டியப்பன், வீரபாண்டியன், முத்துராமலிங்கபூபதி, மோகன், மணியம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union State ,Marxist Communist ,Sivakangai ,Sivaganga Palace ,Baja ,Marxist Communist Party ,Marxist District ,Union ,Dinakaran ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு